×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெ.டிரைவரின் தாய், அண்ணியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெ.கார் டிரைவர் கனகராஜின் தாய், அண்ணியிடம் சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலனும் ஆவணங்களை அழித்ததாக கைது செய்யப்பட்டார். அவரிடம் கடந்த மாதம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்துவிட்டு வந்த தம்பி கனகராஜ், யார் கொள்ளையடிக்க சொன்னது என்ற விவரத்தையும், அங்கிருந்து எடுத்து வந்த ஆவணங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் தன்னிடம் கூறியதாக பல்வேறு தகவல்களை கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகராஜின் மற்றொரு அண்ணன் பழனிவேலிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று இடைப்பாடி பக்கமுள்ள சமுத்திரம் சித்ரபாளையத்திற்கு சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் பழனிவேலின் மனைவி சொர்ணாம்பிகை, கனகராஜின் தாய் சித்தாயி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. கொடநாடு வழக்கு தொடர்பாக அவர்கள் கூறிய தகவல்களை பதிவு செய்த போலீசார், மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெ.டிரைவரின் தாய், அண்ணியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID police ,J. Driver ,Koda Nadu ,Salem ,J. ,Kanagaraj ,Kodanad ,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...